Rock Fort Times
Online News

திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கினார்- தேடும் பணி தீவிரம்…!

திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று (ஜூன் 21) தனது நண்பர்கள் விக்னேஷ், பிரசன்னா மற்றும் பிரவீன் ஆகிய மூவருடன் கம்பரசம்பேட்டை அருகே உள்ள காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் நான்கு பேரும் ஆழம் அதிகம் உள்ள பகுதிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் நான்கு பேரும் தண்ணீரில் சிக்கிக் கொண்டு தத்தளித்துக் கொண்டிருந்தனர். இதனை பார்த்து அங்கு குளித்துக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் 2 பேர், மாணவர்கள் நான்கு பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் மூவரை அவர்கள் மீட்டனர். ராமன் மட்டும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ராமனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்