திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 27). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் வாட்ஸ்அப் மூலமாக வேறு சில பெண்களுடன் முகமது உசேன் பேசியதை கண்டு காதல் மனைவி அதிர்ச்சி அடைந்தார். அவரது செல்போனை வாங்கி பார்த்தபோது மனைவி மற்றும் மாமியாரை ஆபாசமாக செல்போனில் படம் எடுத்து அதை நண்பர்களுக்கு பகிர்ந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவர் கொடுத்த புகாரின் பேரில், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் அஜந்தா ராணி, முகமது உசேன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.