Rock Fort Times
Online News

திருவண்ணாமலையில் பாறை உருண்டு வீடுகள் மீது விழுந்ததில் சிக்கிய 7 பேரில் சிறுவன் சடலமாக மீட்பு…! ( வீடியோ இணைப்பு)

புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் அதி கன மழை பெய்தது. மழை காரணமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலை உச்சியில் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து பாறை ஒன்று உருண்டு வந்து, வ.உ.சி.நகர் தெருவில் உள்ள வீடுகளின் மீது விழுந்தது. இதில் இரு வீடுகளில் இருந்த 7 பேர் சிக்கி உள்ளதாக அஞ்சப்படுகிறது. தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால், போதிய வெளிச்சம் இல்லாததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் 2-வது நாளாக இன்று(02-12-2024) மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள், 7 பேரை உயிருடன் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணி நடைபெறும் இடத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் மற்றும் எஸ்.பி சுதாகர் ஆகியோரும் முகாமிட்டு மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் 7 பேரில் ஒரு சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்