Rock Fort Times
Online News

திருச்சி, சமயபுரம் அருகே வீட்டிற்குள் பதுங்கி இருந்த 6 அடி நீளமுள்ள கோதுமை நாகம் பிடிபட்டது…! ( வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்டம், சமயபுரம் கல்லுக்குடி பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் ஸ்ரீசிவாஸ். கூலி தொழிலாளி.  இவர் ஓட்டு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று(18-11-2024) காலை வேலைக்குச் சென்ற ஸ்ரீசிவாஸ் மதியம் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வீட்டு விட்டத்தில் கோதுமை நாகம் ஒன்று பதுங்கி இருந்தது. அதை பார்த்த ஸ்ரீசிவாஸ் இதுகுறித்து சமயபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.  தகவலின்பேரில் நிலைய அலுவலர் மனோகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று வீட்டுக்கு மேலே ஏறி 6 அடி நீளமுள்ள கோதுமை நாகத்தை உயிருடன் பிடித்து அருகில் உள்ள தச்சங்குறிச்சி வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்