Rock Fort Times
Online News

2026ல் சட்டசபை தேர்தல்… அதிமுகவில் விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு..!

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான விருப்ப மனுக்களைப் பெற அதிமுக கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. அதன்படி, தங்கள் விண்ணப்பங்களை டிசம்பர் 28 முதல் டிசம்பர் 31 வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தலைமைக் கழகத்தில் பெற்று, அனைத்து தேவையான விவரங்களையும் முறையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்பும் அனைவரும் தலைமைக் கழகத்தில் 15.12.2025 முதல் 23.12.2025 வரை விருப்ப மனுக்கள் வழங்கி வருவதாக தெரிவிக்கிறேன். இதன்பிறகு, தொடர்ந்து வந்த வேண்டுகோள்களை ஏற்று, விருப்ப மனுக்கள் பெறுவதற்கான காலத்தை 28.12.2025 – ஞாயிற்றுக்கிழமை முதல் 31.12.2025 – புதன்கிழமை வரை நீட்டித்துள்ளோம். வேட்பாளர்கள் அந்த காலத்திற்குள் படிவங்களை பெற்று, கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்,” எனக் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்