Rock Fort Times
Online News

“திமுக குடும்ப ஆட்சியை வீழ்த்தி 2026-ல் நல்லாட்சி அமைப்போம்”…* ஜெயலலிதா நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி இபிஎஸ் சூளுரை…!

“மக்களால் நான்; மக்களுக்காக நான்” என்ற குரலுக்கு சொந்தக்காரர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரது 9ம் ஆண்டு நினைவு நாள் இன்று(டிச.5) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினர். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவில், அதிமுக தொண்டர்களின் இதயத் துடிப்பில் அன்றும், இன்றும், என்றும் வாழும் எங்கள் இதயதெய்வம் ஜெயலலிதா, “மக்களால் நான்; மக்களுக்காக நான்” என்ற தவவாழ்விற்கே தன்னை அர்ப்பணித்து, உலகெங்கும் உள்ள தமிழர்கள் வாழ்வெல்லாம் மலர வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு ஒவ்வொரு திட்டத்தையும் தாயுள்ளத்தோடு பார்த்து பார்த்து அளித்த ஒப்பற்ற தலைவி. நூற்றாண்டு கனவு நோக்கி அதிமுக பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை. இன்று வரையிலும், இனியும் எனது ஒவ்வொரு செயலுக்கு பின்னால் இருக்கும் எனது அரசியல் வேத நிலையம். அவர்தம், 9 ம் ஆண்டு நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன். தமிழ்நாட்டைப் பிடித்துள்ள தீயசக்தி திமுக குடும்ப ஆட்சியை வீழ்த்தி, “அமைதி, வளம், வளர்ச்சி” என்று ஜெயலலிதா காட்டிய வழியில் தமிழ்நாட்டை செலுத்தும் மக்களுக்கான நல்லாட்சியை அதிமுக தலைமையில் 2026 பேரவைத் தேர்தலில் வாயிலாக நிறுவி, ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்பதே, அவர்களுக்கு நாம் செலுக்கும் உண்மையான புகழஞ்சலி! என கூறியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்