Rock Fort Times
Online News

ஆசை வார்த்தை கூறிய பெண்களிடம் ரூ.10 லட்சம், 20 பவுன் நகையை இழந்தவர் போலீசில் புகார்- 3 பேர் மீது வழக்கு…!

திருச்சியை அடுத்த நொச்சியம் மாதவப் பெருமாள் கோவில் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது40). இவரிடம் சேலம் மாவட்டம் சமத் காலனி பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதி மற்றும் ஒரு பெண் அறிமுகமாகி நாங்கள் ஆன்லைன் வர்த்தகம் செய்கிறோம் அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினர். இதனை நம்பிய விஜயகுமார் கடந்த 2023ம் ஆண்டு ஏப்.10 ந் தேதி தில்லை நகர் சாஸ்திரி ரோடு அருகே அவர்கள் மூன்று பேரிடம் ரூ.10 லட்சம் பணம் மற்றும் 20 பவுன் தங்க நகைகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் எந்த லாப பணத்தையும் அளிக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த விஜயகுமார், இதுகுறித்து தில்லைநகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தம்பதி உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்