திருச்சியில் நாளை தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை!
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை ( ஜூன் 19) வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வி.என். நகர், திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் என்.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெறுகிறது. கூட்டத்தில் திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வரின் வழிகாட்டுதலின்படி, கழக உறுப்பினர் சேர்க்கையை ஓரணியில் தமிழ்நாடு’ என்ற தலைப்பின்கீழ் ஒருங்கிணைத்துள்ளது குறித்தும், ஆக்கபூர்வமான பணிகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர், தொகுதி பார்வையாளர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட ,மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.