கரூர் மாவட்டம், லாலாபேட்டையை சேர்ந்தவர் முகமது கனி. இவர், தனது நண்பர் மணப்பாறையை சேர்ந்த அஜ்மீர் என்பவர் மூலமாக தனது செல்போனை விற்பனை செய்துள்ளார். அந்த செல்போனை அவர் ரூ.30 ஆயிரத்துக்கு விற்றுள்ளார். ஆனால், அஜ்மீர் ரூ.15 ஆயிரத்தை மட்டும் நண்பரிடம் கொடுத்துவிட்டு மீதி பணத்தை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த முகமது கனி இன்று( ஜூன் 16) திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கிருந்த வழக்கறிஞர்கள் அவரை தீக்குளிக்க விடாமல் மண்ணெண்ணெய் கேனை பறித்தனர். தொடர்ந்து நீதிபதியிடம் அழைத்து சென்றனர். அவரிடம் விசாரித்த நீதிபதி, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் நீதிமன்றம் சென்ற செசன்ஸ் கோர்ட் போலீசார் முகமது கனியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்றத்திற்குள் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Comments are closed.