திருச்சியில் காமராஜர் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு இடையேயான பேச்சுப்போட்டி…! * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு
பெருந்தலைவர் காமராஜர் 123-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, தினத்தந்தி, மதுரை வடமலையான் மருத்துவமனை இணைந்து நடத்தும் கல்வித் திருவிழா-2025 பேச்சுப்போட்டி திருச்சி மரக்கடை அருகில் உள்ள சந்தன மகாலில் இன்று(14-06-2025) நடைபெற்றது. விழாவினை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.அவனி மாடசாமி தலைமை தாங்கினார்.ஏ.டி.முருகேச பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார்.இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது பேச்சுத் திறனை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்க பரிசுகளை பழக்கடை சரவணன் வழங்கினார். விழாவில் ரவீந்திர ஜெய மோகன், அருண் பி.அய்யனார், பால்ராஜ், காமராஜ், காட்டூர் இளங்கோ, ஏசையா, அருள்ராஜ், ஆர்.டி.வி.மணி, வே.மூர்த்தி நாடார், பாலாஜி, சுப்பிரமணியம், பேராசிரியர் மணி பிரகஸ்பதி, ரங்கநாயகி பட்டாணி கடை உரிமையாளர் சரவணன், திருச்சி நாடார் உறவின்முறை சண்முகதுரை, வக்கீல் சிவா, நாகமங்கலம் கண்ணன், மேல சிந்தாமணி உறவின்முறை ரவி நாடார், எடமலைப்பட்டிபுதூர் சங்கம் தர்மதாஸ், இசக்கிமுத்து, ஸ்ரீரங்கம் நாடார் உறவின்முறை செல்வமுருகன், எல்.சேகர், நெல்லை நாடார் உறவின்முறை பட்டு முருகன், கண்ணன், பாண்டியனார், தொழிற்சங்கம் குருசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் போஸ் செல்வக்குமார் நன்றி கூறினார்.
Comments are closed.