Rock Fort Times
Online News

மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை…

இந்து சமய அறநிலைத்துறை அறிவிப்பின்படி பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. அதன்படி மாசி மாத பௌர்ணமி நாளான இன்று ( மார்ச் 14 ) சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அதிகாலையில் நடைத்திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் சன்னதிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து 6 மணி அளவில். கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருவிளக்கு பூஜையில் திருச்சி மாவட்டம் மட்டும்மல்லாது வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்