இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவராக தற்போது சோம்நாத் உள்ளார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்தநிலையில், இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணனை மத்திய அரசின் நியமனக்குழு நியமனம் செய்துள்ளது. இஸ்ரோவின் அடுத்த தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள வி.நாராயணன், கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். இவர் திருவனந்தபுரத்தில் வலியமலாவில் உள்ள எல்.பி.,எஸ்.சியின் இயக்குனராக பணியற்றியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் இஸ்ரோ தலைவராக வி.நாராயணன் பொறுப்பேற்றார். மேலும் அவர் 2 ஆண்டுகள் வரை இப்பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ADVERTISEMENT…👇
Comments are closed.