Rock Fort Times
Online News

மணப்பாறை அருகே, வீரமலை பாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி நடப்பதால் 21, 22 தேதிகளில் பொதுமக்கள் நடமாட தடை – திருச்சி கலெக்டர் பிரதீப்குமார்…!

திருச்சி மாவட்ட  கலெக்டர் மா.பிரதீப்குமார் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில்,  திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம்,  வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் 21.10.2024 மற்றும் 22.10.2024 ஆகிய இரண்டு நாட்கள் காலை 7-30 மணி முதல் மாலை 5-30 மணி வரையும், இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரையும் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது.  ஆகவே, அந்த இரு நாட்களில் அந்த வழியாக பொதுமக்கள் நடமாடவோ, மேய்ச்சலுக்காக கால்நடைகளை அழைத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்