அம்பேத்கரின் 67-வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருச்சி ஜங்ஷன் அரிஸ்டோ ரவுண்டானாவில் உள்ள அவரது சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் மாநில பொது செயலாளரும், பெருங்கோட்ட பொறுப்பாளருமான கருப்பு முருகானந்தம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் காளீஸ்வரன், தண்டபாணி, ஒண்டிமுத்து, நாகேந்திரன், ஸ்ரீராம் சங்கர், மகளிர் அணி புவனேஸ்வரி, ரேகா, மண்டல் தலைவர்கள் பழனிக்குமார், புருஷோத்தமன், பரஞ்சோதி, பரமசிவம், செயற்குழு உறுப்பினர் இந்திரன், ஊடகப்பிரிவு சிவக்குமார், சந்தோஷ்குமார், உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.