Rock Fort Times
Online News

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே 9 பவுன் தங்க சங்கிலி பறிப்பு!

திருச்சி, ராஜா காலனிபகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 57).இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.மூர்த்தியும் ,இவரது மனைவி சாந்தியும் இன்று கடைக்கு வெளியில் காய்கறிகள் மற்றும் பலசரக்கு பொருட்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். அப்போது கடைக்கு வந்த. நபர் குளிர்பானம் வாங்கி அருந்தியுள்ளார். யாரும் எதிர்பாராத நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்த சாந்தியின் கழுத்தில் இருந்த 9 பவுன் தங்கச் செயினை பறித்து விட்டு அருகில் தயாராக இருந்த இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடினார் .அப்போது கணவன் – மனைவி இருவரும் சத்தம் போட்டுக் கொண்டே கொள்ளையனை விரட்டினர். அந்த மர்ம நபர் கலெக்டர் அலுவலக சாலையில் வேகமாக சென்று தப்பிவிட்டார்.இதுகுறித்து கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர் .புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் மிகுந்த திருச்சி மாநகரின் மிக முக்கியமான பகுதியில் அதுவும் கலெக்டர் அலுவலகத்திற்குமிக அருகில் நடைபெற்ற இந்த செயின் பறிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்