தீபாவளி பண்டிகைக்காக திருச்சி மாநகரில் 81 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி
போலீஸ் கமிஷனர் என். காமினி தகவல்
தீபாவளி பண்டிகை வருகிற 12.11.2023-ந்தேதி ( ஞாயிற்றுக்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் திருச்சி மாநகரில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பித்த மனுக்கள் மீது திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் என்.காமினி பரிசீலனை செய்தார். பட்டாசு கடை அமைக்க அனுமதி கேட்கப்பட்ட இடங்களுக்கு காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் நேரடியாக சென்று பாதுகாப்பு முன்னேற்பாடுகள் சரியாக செய்யப்பட்டுள்ளனவா? என்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வுகளின் அடிப்படையில் திருச்சி மாநகர பகுதிகளில் 81 தற்காலிக பட்டாசு விற்பனை கடைகளுக்கு போலீஸ் கமிஷனர் காமினி அனுமதி வழங்கினார். தற்காலிக பட்டாசு கடைகள் காவல்துறை மற்றும் மற்ற துறைகளின் முறையான அனுமதி பெறாமால் நடத்துவது சட்டப்படி குற்றம், அதனை மீறி கடைநடத்தும் கடை உரிமையாளர் மீது கடுமையான மற்றும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஆன்லைனில் குறைந்த விலைக்கு பட்டாசு விற்பனை செய்வதாக வரும் விளம்பரங்களை நம்ப ஏமாற வேண்டாம் எனவும் போலீஸ் கமிஷனர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.