Rock Fort Times
Online News

7 -ம் ஆண்டு நினைவு தினம்: திருச்சியில் உள்ள கருணாநிதி சிலைக்கு மத்திய, வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை…!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் உருவ சிலைக்கு திருச்சி மத்திய மாவட்ட கழக செயலாளர் வைரமணி, மாநகர செயலாளரும், மேயருமான மு.அன்பழகன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதனைத்தொடர்ந்து பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வில் மாணவரணி இன்ஜினியர் ஆனந்த், மாவட்ட பொருளாளர் துரைராஜ், அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம், மாவட்ட துணைச் செயலாளர்கள் முத்துச்செல்வம், விஜயா ஜெயராஜ், மத்திய மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர், ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல், பகுதிச் செயலாளர்கள் கமால் முஸ்தபா, மோகன்தாஸ், ராம்குமார், இளங்கோ, காஜாமலை விஜய், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ், மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது, மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்க்காதேவி, மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஈஞ்சூர் சதீஷ்,வர்த்தகர் அணி தொழிலதிபர் ஜான்சன் குமார், மீனவர் அணி முள்ளிப்பட்டி பால்ராஜ், மாநகர துணை செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி, மாவட்ட பிரதிநிதிகள் வக்கீல் மணிவண்ண பாரதி, சோழன் சம்பத், மாமன்ற உறுப்பினர்கள் கலைச்செல்வி, மஞ்சுளா பாலசுப்பிரமணியன், புஷ்பராஜ், ராமதாஸ், வட்டச் செயலாளர்கள் வாமடம் சுரேஷ், புத்தூர் பவுல்ராஜ், மார்சிங்பேட்டை செல்வராஜ், தனசேகர் உள்ளிட்ட திமுகவினர் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள். இதேபோல் திருச்சி மத்திய, வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகர, பேரூர், பகுதிக்கழக, வட்டக் கழகங்களில் கருணாநிதி படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்