தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்(டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப்-1 மற்றும் 1ஏ யில் அடங்கிய பல்வேறு பதவிக்கான போட்டி தேர்வு தமிழகம் முழுவதும் இன்று (15.06-2025) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்விற்காக திருச்சி மாவட்டத்தில் 37 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வினாத்தாள் மற்றும் இடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள 11 இயங்கு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இக்குழுவில் துணை வட்டாட்சியர் நிலையில் ஒரு அலுவலர், ஆயுதம் தாங்கிய ஒரு காவலர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் தேர்வை கண்காணிக்கும் பொருட்டு 37 ஆய்வு அலுவலர்களும், தேர்வு நடைபெறுவதை பதிவு செய்திட வீடியோகிராபர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். காவல்துறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.தேர்வு எழுத வரும் தேர்வாளர்கள் செல்போன் உள்ளிட்ட எவ்வித மின்னணு சாதனங்களும் தேர்வு மையத்திற்குள் எடுத்து வர அனுமதிக்கப்படவில்லை. காலை 9 மணிக்கு பின்னர்தேர்வு கூடத்திற்குள் வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. திருச்சி மாவட்டத்தில் 10,042 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். அதில் 7,452 பேர் தேர்வு எழுத வந்திருந்தனர். 2,590 பேர் வரவில்லை. ஒரு மையத்தில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.
Comments are closed.