Rock Fort Times
Online News

தமிழகத்தில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: டிஐஜி ஆனார், திருச்சி எஸ்.பி. வருண் குமார்…!

தமிழகத்தில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது

ஆயுதப்படை ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு, அதே பொறுப்பில் நீடிக்கப்படுகிறார்.  நிர்வாகப்பிரிவு ஏடிஜிபியாக இருந்த வெங்கடராமன், சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு அதே பொறுப்பில் நீடிப்பார். தலைமையிட ஏடிஜிபி வினித் தேவ் வான்கடவேக்கு சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு, அதே பொறுப்பில் நீட்டிக்கப்படுகிறார். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி கல்பனா நாயக், அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த ராஜாராம் ஐபிஎஸ், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை எஸ்.பி. கிரண்சுருதி, சென்னை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி-யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட எஸ்.பி அபிஷேக் குப்தா, புதுக்கோட்டை எஸ்.பி ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் ,சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளார். திருவாரூர் எஸ்.பி ஜெயக்குமார், கடலூர் எஸ்.பி ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஆக பணியாற்றிய சுந்தரவதனம் சென்னை Q பிரிவு எஸ்.பி ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட எஸ்.பி டேங்கரே பிரவீன் உமேஷ், சென்னை மேற்கு சரகம், லஞ்ச ஒழிப்பு பிரிவு எஸ்.பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செல்வநாகரத்தினம், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சரவணன், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தீபக்சிவச், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக யாதவ் கிரிஸ் அசோக், கன்னியாகுமாரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்டாலின், ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளராக விவேகானாந்தா சுக்லா, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அரவிந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்