51-ம் ஆண்டு நினைவு தினம்: திருச்சியில் உள்ள பெரியார் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நாளை 24-ம் தேதி மாலை அணிவித்து மரியாதை…!
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 51 -ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியா சிலைக்கு நாளை (24-12-2024) காலை 8 மணியளவில் கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையிலும், மத்திய மாவட்ட செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் ந.தியாகராஜன் எம்.எல்.ஏ, மாநகர செயலாளர் மு.அன்பழகன் ஆகியோர் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட, மாநகர, அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள், கழக முன்னோடிகள், செயல்வீரர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு
சிறப்பித்திட வேண்டுகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments are closed.