தமிழகத்தின் சில மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் சிலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் பொருட்டும், அப்படி யாராவது பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க திருச்சி அரசு மருத்துவமனையில் தனி வார்டும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் திருச்சி மாவட்டத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் நலமுடன் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில்
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப் குமார் ஐஏஎஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர், டெங்கு வார்டு, ரத்தப் பரிசோதனை உபகரணங்கள், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது காய்ச்சலுக்கான ஊசி, மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு உள்ளதா? என டாக்டர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது அரசு மருத்துவமனை டீன் நேரு, மருத்துவா்கள் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.