40 ஆண்டுகால ஏக்கம் தீர்ந்தது : திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் 872 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா -அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்…!
திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுமார் 21 ஊராட்சிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி சுமார் 40 ஆண்டு காலமாக போராடி வருகின்றனர். அவர்களது ஏக்கத்தை தீர்க்கும் வகையில் அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தீவிர நடவடிக்கை மேற்கொண்டார். இதன் காரணமாக இன்றைய தினம்(21-08-2024) நடராஜபுரம், அரசங்குடி, கிருஷ்ணசமுத்திரம், வாழவந்தான் கோட்டை, திருநெடுங்குளம், பத்தாளபேட்டை உட்பட ஊராட்சிகளில் உள்ள கிராமப் பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் சுமார் 872 பேருக்கு இலவச பட்டா வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட வருவாய் துறை மூலம் திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
இதேபோல, விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்பாக உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர் மு.மதிவாணன், மாவட்ட கவுன்சிலர் கருணாநிதி, திருவெறும்பூர் ஒன்றிய குழு தலைவர் சத்யா கோவிந்தராஜ், மாமன்ற உறுப்பினர்கள் நீலமேகம், செந்தில், கூத்தைப்பார் பேரூராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலெட்சுமி, மாவட்ட ஊராட்சிகள் திட்ட இயக்குனர் கங்காதரணி, வருவாய் கோட்டாட்சியர் அருள், திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாசம், திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நரசிம்மன், ஸ்ரீதர் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed.