Rock Fort Times
Online News

திருச்சி கோட்டத்தில் 4 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்…! கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்

திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் எம்.எஸ். அன்பழகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது: அம்ரித் பாரத் திட்டம் மூலம் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உலகத் தரம் வாய்ந்த வசதிகளுடன் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகிறது. அழகிய முகப்பு, சுத்தமான மற்றும் விசாலமான காத்திருப்பு அறைகள், பயணிகளுக்கு ஏற்ற நவீன வசதிகளுடன் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 500 ரயில் நிலையங்களை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், தெற்கு ரயில்வேயில் 25 ரயில் நிலையங்களை மேம்படுத்த மொத்தம் ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 18 ரயில் நிலையங்களும், கேரளாவில் 5 நிலையங்களும், கர்நாடகாவில் 1, புதுச்சேரியில் ஒன்றும் முதல் கட்டத்தில் அடங்கும். திருச்சி கோட்டத்தில் தஞ்சாவூர், விழுப்புரம், மயிலாடுதுறை, புதுச்சேரி ஆகிய 4 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். அப்போது கோட்ட வணிக முதுநிலை மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்