Rock Fort Times
Online News

திருச்சி, எ.புதூரில் வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகைகள் திருட்டு…!

திருச்சி, எடமலைப்பட்டிபுதூர் சுந்தரம் பிள்ளை தோட்டம், பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன். ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். இவரது மனைவி விஜயலட்சுமி (58). இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு ராமேசுவரம் கோவிலுக்கு சென்றிருந்தனர். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பியபோது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. தம்பதி, வெளியூர் சென்றிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்