சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் திருவண்ணாமலைக்கு ஆன்மிக பயணமாக வந்தனர். அவர்கள் கிரிவலப்பாதையில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி இருந்தனர். இன்று(28-12-2024) நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வெளியே வராததால், அங்கு வேலை செய்த பணியாளர்கள் சந்தேகமடைந்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் அங்கு வந்த போலீசார், கதவை திறந்து பார்த்தபோது 4 பேரும் இறந்து கிடந்தனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அந்த வீட்டில் இருந்து டைரி ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில், நாங்கள் இறைவனிடம் செல்கிறோம் என எழுதப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த யாசர்(45), அவரது மனைவி பிரியா(40), இவர்களது மகள் ஜலந்தரி மற்றும் மகன் ஆகாஷ்குமார் என்பது தெரியவந்தது.4 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.