Rock Fort Times
Online News

திருக்கோவில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு : தமிழக அரசு அறிவிப்பு..

தமிழகத்தில் உள்ள   திருக்கோவில் பணியாளர்களுக்கு  அகவிலைப்படியை 42%ல் இருந்து  46% ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறை ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் 42% ஆக வழங்கப்பட்டு வந்த நிலையில் பணியாளர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது  4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.  மேலும், பகுதிநேர, தினக்கூலி, தொகுப்பூதிய பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு இது பொருந்தாது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்