திருச்சி, ஆழ்வார்தோப்பு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக தில்லை நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தில்லைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்றதாக ராம்ஜி நகர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கோபிநாதன் மனைவி கோமதி (வயது 55), அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் (42), திருச்சி மேல சிந்தாமணியை சேர்ந்த அப்துல் யூனுஸ் (22 )ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய கோபிநாதன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களிடமிருந்து ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா மற்றும் ரூ.5,200 பணம், செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
Comments are closed.