Rock Fort Times
Online News

ஈரோடு அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி..!

ஆடிப்பெருக்கை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்தநிலையில், ஈரோடு மாவட்டம், கொடுமுடி காசிபாளையம் காவிரி ஆற்றில் கொத்தளம் புதூர் மதுரை கோவிலுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக சென்ற போது 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கோவிலுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக சென்ற போது, ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில், ஜெகதீஷ்(வயது 18), சவுத்ரி (14), சுப்புராஜ்(17) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 2 சிறுவர்களின் உடல் மீட்கப்பட்டு உள்ளது . மற்ற ஒரு சிறுவனின் உடலை தேடும் பணியில் தீயணைப்பு துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்