பாங்காக்கில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 3 கிலோ உயர் ரக கஞ்சா பறிமுதல்…!* பயணியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அங்கிருந்தும் திருச்சிக்கு விமானங்கள் வந்து செல்கின்றன. இந்தநிலையில் வெளிநாடுகளில் இருந்து தங்கம், வெளிநாட்டு பணம், போதைப்பொருள், கஞ்சா உள்ளிட்டவை கடத்தி வருவதும் அதனை அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக ஸ்கூட் விமானம் ஒன்று நேற்று (மே 19) நள்ளிரவு 1.05 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி தமது உடைமையில் 3 கிலோ ஹைட்ரோபோனிக் என்ற உயர் ரக கஞ்சாவை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed.