திருச்சி சரகத்தில் பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 22 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய அம்சவேணி கரூர் மாவட்டத்துக்கும், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி முசிறிக்கும், அங்கு பணியாற்றிய மணிவண்ணன் துவாக்குடிக்கும் (இவர் ஏற்கெனவே பொறுப்பு ஆய்வாளராக உள்ளார்), மணப்பாறை காவல் நிலையத்தில் பணியாற்றிய ரகுராமன் சமயபுரத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் மொத்தம் 22 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி சரக டிஐஜி வருண்குமார் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Comments are closed.