Rock Fort Times
Online News

சிறுமியை கர்ப்ப மாக்கிய 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை…

காஞ்சிபுரத்தை அடுத்த கம்மார்பாளையம், அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஹரி(28), கங்காதரன் (21). இவர்கள் இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு 10ம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால், கர்ப்பமான அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ஹரி, கங்காதரன் ஆகிய இருவரையும் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் இருவரும் ஜாமினில் வந்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றவாளியான ஹரி, கங்காதரன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தமிழரசி உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் ஒரு மாதத்திற்குள் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். பின்னர், குற்றவாளிகள் இருவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்