திருச்சி சிட்டி பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அந்தந்த காவல் நிலைய போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்லணை ரோட்டில், சரக்கு வாகனம் ஒன்றில் இரண்டு வாலிபர்கள் ஆற்று மணலை அள்ளிக்கொண்டிருப்பதை பார்த்த போலீசார் உடனடியாக இருவரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் திருச்சி, திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் ( வயது 28 ), தண்டபாணி (30) என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து அவர்கள் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து இரண்டு யூனிட் மணலை பறிமுதல் செய்தனர்.
Comments are closed.