சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களிடம் தலா ரூ.200 வாங்கிக் கொண்டு சாமி தரிசனம் செய்ய குறுக்கு வழியில் அழைத்துச்சென்ற இடைத்தரகர்கள் 2 பேர் கைது…! ( வீடியோ இணைப்பு)
தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் சமயபுரம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். விசேஷ காலங்களில் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கும். தற்போது சபரிமலை சீசன் என்பதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களும் மாரியம்மன் கோவிலுக்கு படையெடுத்து வருகின்றனர்.
அவர்களை கோவிலில் நிற்கும் இடைத்தரகர்கள் சிலர் அணுகி, அம்மனை எளிதில் தரிசிக்க ஒரு பக்தருக்கு 200 ரூபாய் வீதம் கொடுத்தால் குறுக்கு வழியில் அழைத்து செல்வதாக பேரம் பேசுகின்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகின. கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பேரம்
பேசி தலா ஒருவருக்கு இருநூறு ரூபாய் கொடுத்தால் நேரடியாக சாமி தரிசனம் செய்ய அழைத்துச் செல்வதாக அந்த வீடியோ காட்சியில் இடம் பெற்றுள்ளன.
இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு இடைத்தரகர்களாக செயல்பட்ட தங்கப்பழம் (55 ), யாசிபா (21) ஆகிய 2 பேரை சமயபுரம் போலீசார் கைது செய்து இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர் .
Comments are closed.