Rock Fort Times
Online News

திருச்சி வந்த விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சா பொட்டலம்- கடத்தி வந்தது யார்? போலீசார் விசாரணை

திருச்சி ஜங்ஷன் ரயில்வே இருப்பு பாதை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷீலா உத்தரவின்பேரில், எஸ்.எஸ்.ஐ. அபிராமி எஸ்.ஐ.சுப்பிரமணியன், தலைமை காவலர் வீரமலை, காவலர்கள் ஜெயந்தி, சேகர், திவாகர் ஆகியோர் நேற்று(29-04-2025) நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி வந்தடைந்த ஹௌரா- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை நடத்தினர். அப்போது பயணிகள் பொது பெட்டியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வெள்ளை ‌ நிற கட்டப்பை ஒன்று கிடந்தது. அந்தப் பைக்கு யாரும் உரிமை கோராததால் அதை எடுத்து சோதனை செய்தபோது அதில் இரண்டு கிலோ கஞ்சா பொட்டலம் இருந்தது. அந்த கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் அதனை போதைப் பொருட்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு எஸ்ஐ விஸ்வநாதனிடம் ஒப்படைத்தனர். அந்த கஞ்சாவை கடத்தி வந்தது யார்? எங்கிருந்து கடத்தி வந்தனர்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்