Rock Fort Times
Online News

சளி, காய்ச்சலுக்கு பயன்படுத்தும் 174 மருந்துகள் தரமற்றவை: தரக்கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவல்!

தற்போது பனியோடு சேர்ந்து மிதமான மழையும் பெய்து வருவதால் பலர் சளி, காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள் மருந்து கடைகளில் வாங்கி உட்கொள்ளும் மாத்திரைகளில் 174 தரமற்​றவை, போலி என்​பது மத்​திய மருந்து தரக்​கட்​டுப்​பாட்டு வாரி​யத்​தின் ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது. நாடு முழு​வதும் விற்​பனை செய்​யப்​படும் அனைத்து மாத்திரை, மருந்​துகளை​யும் மத்​திய, மாநில மருந்து தரக்​கட்​டுப்​பாட்டு வாரி​யங்​கள் ஆய்வு செய்​கின்​றன. ஆய்​வில் தரமற்ற, போலி மருந்துகள் கண்​டறியப்​பட்​டால், சம்​பந்​தப்​பட்ட நிறு வனங்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது. அதன்​படி, கடந்த மாதம் 1,000-க்​கும் மேற்​பட்ட மருந்துகள் ஆய்​வுக்கு உட்​படுத்​தப்​பட்​டன. அதில், காய்ச்​சல், சளி, கிரு​மித் தொற்​று, ஜீரணமண்டல பிரச்​சினை உள்​ளிட்ட பாதிப்​பு​களுக்கு பயன்​படுத்​தப்​படும் 167 மருந்துகள் தரமற்​ற​தாக​வும், 7 மருந்துகள் போலி​யாக​வும் இருந்​தது கண்​டறியப்​பட்​டது. அந்த விவரங்​கள் பொதுமக்களின் விழிப்​புணர்​வுக்​காக, மத்​திய மருந்து தரக்​கட்​டுப்​பாட்டு வாரி​யத்​தின் cdsco.gov.in என்ற இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. விளக்​கம் கேட்டு சம்​பந்​தப்​பட்ட நிறுவனங்​களுக்கு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்