திருச்சி, என்.எம்.கே.காலனி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 51). இவர் ஜதராபாத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த வீட்டில் அவரது தாய் விமலா மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த மார்ச் மாதம் இறந்து விட்டார். இதையடுத்து அவரது 30-ம் நாள் சடங்கு நடைபெற்றது. அப்போது சீனிவாசன் வீட்டில் இருந்த நிலையில் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த 15 பவுன் நகைகள், வெள்ளிப் பொருட்கள், பணம் ஆகியவை திருட்டு போய் விட்டது. இதுதொடர்பாக கண்டோன்மென்ட் போலீசில் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டில் வேலை பார்த்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.