Rock Fort Times
Online News

திருச்சியில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 15 பவுன் நகைகள் “அபேஸ்”…!

திருச்சி, அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் வெள்ளைசாமி. இவரது மனைவி கமலா (வயது 51). இவர் உறவினர் விட்டு திருமணத்திற்கு வெளியூர் செல்ல திட்டமிட்டிருந்தார். அதற்குமுன்பு வீட்டில் இருந்து புறப்பட்டு காந்தி மார்க்கெட்டிற்கு சென்றார். அங்கு காய்கறி மற்றும் பழங்கள் வாங்கிக்கொண்டு ரெயில்வே ஜங்ஷன் செல்வதற்காக காந்தி மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். பின்னர் அங்கு வந்த ஒரு தனியார் பேருந்தில் ஏறி ஜங்ஷன் நோக்கி பயணம் செய்தார். பேருந்து சிறுதூரம் சென்ற நிலையில் தனது கைப்பையை பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த நகைகள் அடங்கிய பையை காணவில்லை. அந்தப் பையில் 15 பவுன் நகைகள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பதறி துடித்த அவர், இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர் பேருந்துக்காக காத்து நின்றபோது யாரும் நகைகளை திருடினார்களா? அல்லது பேருந்தில் ஏறி சென்றபோது நகைகள் திருட்டுப் போனதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதோடு இதில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்