Rock Fort Times
Online News

திருச்சி, முக்கொம்பு மேலணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் 12 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு…!

அமராவதி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று அமராவதி அணை நிரம்பியதால் 36 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப் பட்டது. அந்த தண்ணீர் திருச்சி முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. இதன் காரணமாக முக்கொம்பு மேலணையிலும் தண்ணீர் அதிகரித்து காணப்படுகிறது. முக்கொம்பு மேலணைக்கு தண்ணீர் அதிகரித்து வருவதால் இங்கிருந்து தண்ணீர் திறக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்திருந்தார். இந்தநிலையில் திருச்சி முக்கொம்பு மேலணைக்கு இன்று(14-12-2024) நீர்வரத்து 19 ஆயிரம் கனஅடியாக உள்ளது. அதில் 7 ஆயிரம் கன அடி நீர் காவிரி யிலும், 12 ஆயிரம் கன அடி நீர் கொள்ளிடத்திலும் திறந்து விடப்படுகிறது. இதனால், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. நீர்வரத்து அதிகரித்தால் தண்ணீர் திறப்பும் அதிகரிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்