Rock Fort Times
Online News

பத்தாம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் : திருப்பூரை திணறடித்த மனிதநேய ஜனநாயக கட்சியினர்-* தலைவர் மு.தமிமுன் அன்சாரிக்கு உற்சாக வரவேற்பு…!

மனிதநேய ஜனநாயக கட்சியின் பத்தாம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் திருப்பூரில் நடைபெற்றது.
2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று மனிதநேய ஜனநாயக கட்சி தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் ஒவ்வொரு மாவட்டத்தின் சார்பிலும் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு முன்கூட்டியே நிகழ்ச்சியை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. இதனையொட்டி திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் திருப்பூரில் எழுச்சியோடு நடைபெற்ற இப் பொதுக்கூட்டத்தில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி சிறப்புரையாற்றினார். முன்னதாக காயத்ரி கார்டன் பகுதியில் இருந்து தொடங்கிய வாகன ஊர்வலத்தில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி, பொதுச்செயலாளர் எம்.முகமது நாசர், துணைத் தலைவர் மன்னை.செல்லசாமி, இணைப் பொதுச் செயலாளர் கேப்டன் சையது முகமது பாரூக், துணைப் பொதுச் செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் உள்ளிட்டோரை முழக்கங்களுடன் அழைத்துச் சென்றனர்.

இப்பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராயல் ராஜா தலைமை வகித்தார். ம.ஜ.க.சமூக நீதி பாசறையின் மாநிலச் செயலாளர் நெல்லை ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மஜக சார்பு தொழிற்சங்கமான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் திருப்பூர் ஜாகிர் வரவேற்பு ரையாற்றினார். திருப்பூர் மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளரும், மாநில செயலாளருமான கோவை ஜாபர் தொடக்க உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து இணைப் பொதுச்செயலாளர் கேப்டன் சையது, முகமது ஃபாருக், துணைப் பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், மஜகவின் பயணம் குறித்து எழுச்சி உரையாற்றினர். தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் எம்எல்ஏ மஜகவின் சேவைகளை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார். அதன்பிறகு வழக்கறிஞர் உமர் கய்யாம் மற்றும் தென்னாடு மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் செந்தில் வாண்டையார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பிறகு கூட்டத்தினர் இந்தி திணிப்புக்கு எதிராக முழக்கமிட்டு தங்களுடைய செல்போன் விளக்குகளை ஒளிர விட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அதன்பிறகு துணைத் தலைவர் மண்ணை. செல்வச்சாமி பேசினார். அவரை தொடர்ந்து கட்சியின் அரசியல் பார்வை குறித்து பொதுச்செயலாளர் எம்.முகமது நாசர் காத்திரமான உரையை வழங்கினார். நிறைவாக தொண்டர்களின் எழுச்சி முழக்கங்களுக்கிடையே தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேசினார். கடந்த 9 ஆண்டு காலத்தில் மஜக ஏற்படுத்திய அரசியல் தாக்கங்கள் குறித்தும், சட்டமன்ற பணிகள் குறித்தும், சமூக நல்லிணக்கத்திற்கு மஜக எடுத்து வரும் ஆக்கபூர்வமான முன் முயற்சிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் விரிவாக பேசினார். அப்போது ‘ கடந்த 10 ஆண்டுகளில் நமது கனவுகளை சாத்தியப்படுத்தினோம். அடுத்த பத்தாண்டுகளில் நமது களத்தை விரிவுபடுத்துவோம்’ என பலத்த ஆரவாரத்திற்கிடையே கூறி உரையை நிறைவு செய்தார். நிகழ்ச்சியை வல்லம் ரியாஸ் தொகுத்து வழங்கினார். மாவட்டப் பொருளாளர் பாபு நன்றி உரையாற்ற இரவு 10 மணிக்கு கூட்டம் நிறைவு பெற்றது. கடந்த 3 வார காலத்தில் சிறப்பாக முன்முயற்சிகள் எடுத்துக் கொண்டு கூட்டத்தை சிறப்பாக நடத்தியதற்காக மாவட்ட நிர்வாகத்தை தலைவர் பாராட்டினார். நிகழ்வை முன்னிட்டு தேவர் சமுதாய அமைப்புகள், கவுண்டர் சமுதாய அமைப்புகள், வெள்ளாளர் சமுதாய அமைப்புகள், தலித் சமுதாய அமைப்புகள் என பலரும் வாழ்த்து பதாகைகளையும் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் ஜேஆர்டி ராஜேந்திரன், கொங்கு தீரன் பிரனேஷ், மரியம் கிட்வேர்ஸ் முகம்மது அன்சாரி, நேஷ்னல் டிரேடர்ஸ் அசன் முகம்மது ஆகியோர் பங்கேற்றனர். மேலும் மாநிலச் செயலாளர்கள் கலைக்குயில் இப்ராஹிம், வல்லம் கபீர், பாபு ஷாகின்ஷா, மாநில துணைச் செயலாளர்கள் அரிமா அசாருதீன், ஜாவித் ஜாபர், பேராசிரியர் அப்துல் சலாம், தாம்பரம் தாரிக், அந்தியூர் ஷாநவாஸ், பொதக்குடி ஜெய்னுதீன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

மேலும், மனித உரிமைகள் அணியின் மாநில செயலாளர் திருப்பூர் கண்ணன், இளைஞர் அணி மாநிலச் செயலாளர் திருச்சி ஷெரிப், மாணவர் இந்தியா மாநிலத் தலைவர் சிதம்பரம் பைசல், தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில செயலாளர் ஆத்தூர் ரஹ்மான், எம்ஜேடிஎஸ் மாநிலச் செயலாளர் மாத்தூர் இப்ராகிம், கொள்கை விளக்க அணியின் மாநில செயலாளர் புரட்சி முழக்கம் பசீர், மனிதநேய வழக்கறிஞர் பேரவையின் செயலாளர் வழக்கறிஞர் ஆமீன், வணிகர் அணி செயலாளர் மதுரை கனி, விவசாய அணி செயலாளர் மதுரை சசி, இளைஞர் அணி மாநில பொருளாளர் ஜியாவுல் ஹக், எம்ஜேவிஎஸ் மாநில துணைச்செயலாளர் ஈரோடு எக்சான், மண்டல இளைஞர் அணி செயலாளர் திலிப் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பொறுப்புகளில் உள்ள மாவட்ட நிர்வாகிகளும், அணி நிர்வாகிகளும், மாநகர பகுதி மற்றும் கிளை நிர்வாகிகளும் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்