Rock Fort Times
Online News

1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும்…* தமிழக வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்…!

தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் வேளாண்மை உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று(15-03-2025) தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும்.

* மின்சார இணைப்பு இல்லாத ஆயிரம் விவசாயிகளுக்கு தனித்து சூரியசக்தியால் இயங்கக் கூடிய பம்புசெட்டுகள் வழங்கப்படும்.

* வேளாண் இயந்திரம் ஆக்குதல் திட்டத்தின் கீழ ரூ. 510 கோடி செலவில் மானிய விலையில் இயந்திரம் வழங்ப்பட்டுள்ளன.

* 2021-24 வரை, 147 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது, பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்வு.

* டெல்டா மாவட்டங்களில் நீர் பாசன பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரியதால், 89.90 லட்சமாக இருந்த பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.

* கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 215 ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

* வேளாண் பட்டதாரிகளை வேளாண் தொழில் முனைவோர்களாக ஆக்கும் திட்டத்தில் 431 இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறியுள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளன.

* கரும்பு உற்பத்தில் தமிழ்நாடு 2 ஆவது இடம் வகித்து வருகிறது. கரும்பு விவசாயிகளுக்கு ரூ.841 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

* முதல்வர் மருந்தகம் போன்று 1000 முதல்வர் உழவர் நல சேவை மையம் அமைக்க ரூ.42 கோடி ஒதுக்கீடு.

* முதல்வர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி உயர்த்தி வழங்கப்படும்.

* நிலமற்ற வேளாண் தொழிலாளர்கலுக்கு விபத்து இறப்புக்கான இழப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

* இயற்கை இறப்புக்கான நிதி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

* இறுதி சடங்கு நிதி உதவி ரூ.2,500 இல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

* முதல்வர் மண் உயிர் காப்போம் திட்டம் ரூ.146 கோடியில் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும்.

* கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் 2,335 ஊராட்சியில் ரூ.269 கோடியில் செயல்படுத்தப்படும். ஏற்கனவே இந்த திட்டம் 10,157 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டது.

* மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில், மலைவாழ் உழவர்கள் முன்னேற்றத் திட்டம் செயல்படுத்தப்படும்.

* உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு நம்மழ்வார் விருது வழங்கப்படும். இதற்காக ரூ.6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* மக்காச்சோள சாகுபடிப் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க ரூ.40 கோடியே 27 லட்சத்தில் மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்படும்.

* முந்திரி சாகுபடியை அதிகரிக்க முந்திரி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்க தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க ரூ.10 கோடி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு முந்திரி வாரியம் ஏற்படுத்தப்படும்.

* தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் ‘கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்’ வரும் ஆண்டில் 2338 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும்.

இதுபோன்று வேளாண் பட்ஜெட்டில் மேலும் பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்