புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பெரியார் நகரை சேர்ந்தவர் ஜோஸ் விக்டர். வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவர் வேளாங்கண்ணி திருவிழாவிற்கு சென்று விட்டு இன்று ( 18.09.2023 ) காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன் பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த, அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் உள்ளிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்க நகைகள், ரூ.5000 ரொக்கம் உள்ளிட்டவை திருடப்பட்டது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஜோஸ் விக்டர் கொடுத்த புகாரின்பேரில் விராலிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.