திருச்சி உழவர் சந்தையில் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர். அப்போது இஸ்லாமிய பெண் ஒருவர் பொங்கல் வைக்கும்போது திடீரென அவரது உடையில் தீப்பிடித்தது. அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்தனர். இதில் அந்தப் பெண்ணுக்கு காலில் தீக்காயம் ஏற்பட்டது. பின்னர், கார் மூலம் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Comments are closed.