Rock Fort Times
Online News

உலக சுற்றுச்சூழல் தினம்: மத்திய மண்டல அஞ்சல் துறை சார்பில் 2 சிறப்பு தபால் உறைகள் வெளியீடு…!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தமிழக மத்திய மண்டல அஞ்சல் துறை பொதுமக்களிடையே தூய்மை சக்தியை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருச்சி ராக்போர்ட் துணை அஞ்சல் அலுவலகம் முதல் திருச்சி தலைமை அஞ்சல் அலுவலகம் வரை மின் மிதிவண்டி பேரணி நடத்தப்பட்டது. இதில், தூய்மை பற்றிய விழிப்புணர்வு பதாகைகளுடன் சிறப்பு தபால் தலையும் எடுத்துச் செல்லப்பட்டது. திருச்சி அஞ்சல் பிரிவைச் சேர்ந்த மஞ்சுளா, இந்த சிறப்பு அஞ்சல் உறையை ராக்போர்ட் துணை அஞ்சல் அலுவலகத்திலிருந்து திருச்சி தலைமை அஞ்சல் அலுவலகம் வரை சுமார் 6 கி.மீ. தூரம் எடுத்துச் சென்றார். தமிழக அஞ்சல் வட்டத்தில் மின் மிதிவண்டி மூலம் எடுத்துச் செல்லப்பட்டது இதுவே முதல் முறை ஆகும். இதைத்தொடர்ந்து, மத்திய மண்டல அஞ்சல் தலைவர் டி.நிர்மலா தேவி 2 சிறப்பு தபால் உறைகளை அஞ்சலக
மூத்த அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் வெளியிட்டார். இந்த இரண்டு சிறப்பு தபால் உறைகளும் திருச்சி தலைமை தபால் நிலையத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்