திருச்சி, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று (12.01.2026) திங்கட்கிழமை மேயர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர், அந்த மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கூட்ட நிகழ்வில், மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி, ஆணையர் லி.மதுபாலன், மண்டலத் தலைவர்கள் துர்காதேவி, ஜெயநிர்மலா, நகரப் பொறியாளர் பி. சிவபாதம் மற்றும் நகர்நல அலுவலர், செயற் பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற் பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

Comments are closed.