Rock Fort Times
Online News

திருச்சி நீதிமன்றத்தில் முதலுதவி சிகிச்சை அறை அமைக்க வேண்டும் – உயர்நீதிமன்ற நீதிபதியிடம் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் கோரிக்கை…!

திருச்சி நீதிமன்றத்தில் முதலுதவி சிகிச்சை அறை அமைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதியிடம்,  திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் கோரிக்கை விடுத்துள்ளார்.  இதுதொடர்பாக சென்னையில் போர்ட் போலியோ உயர் நீதிமன்ற நீதிபதி  எம்.எஸ்.ரமேஷிடம் அவர் கொடுத்த கோரிக்கை மனுவில், திருச்சி நீதிமன்ற கட்டிட வளாகத்தில் முதலுதவி அறை அமைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார். மனுவை பெற்றுக் கொண்ட நீதிபதி இதுகுறித்து ஆவண செய்வதாக கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்