2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்-* திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை …!
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பூத் கிளை கழகங்கள் அமைத்தல், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்த்தல் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி உறுப்பினர் சேர்த்தல் மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் காட்டூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே, எடப்பாடியாரை மீண்டும் முதல்வர் ஆக்க மக்கள் தீர்மானித்து விட்டார்கள். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வலுவான கூட்டணி அமையும். அவர் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது என்றார். கூட்டத்தில் அவைத்தலைவர் அருணகிரி, முன்னாள் எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், எஸ்.எம்.பாலன், சின்னசாமி, மாவட்ட துணை செயலாளர் சுபத்ரா தேவி, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சூரியூர் ராஜா என்கிற ராஜ மணிகண்டன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வமேரி, பகுதி செயலாளர் தண்டபாணி, நகர செயலாளர் எஸ்.பி.பாண்டியன், பாசறை செயலாளர் அருண் நேரு,ஒன்றிய செயலாளர்கள் ராவணன், எஸ்.கே.டி.கார்த்திக் மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed.