Rock Fort Times
Online News

திருச்சி,பொன்மலையில் கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேர் கைது..!

திருச்சி, பொன்மலை காவல் சரகத்துக்கு உட்பட்ட  முன்னாள் ராணுவ வீரர் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் முன்னாள் அப்பகுதியில்  தனிப்படையுடன் சென்றனர்.அங்கு 6 பேர் கொண்ட கும்பல் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்தனர்.  போலீசார் வருவதை கண்டவுடன் 2பேர் தப்பி ஓடி விட்டனர்.மீதி 4  பேரை  பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கஞ்சா விற்றது உறுதியானது. இதையடுத்து  திருச்சி அரியமங்கலம் கலைவாணர் தெருவை சேர்ந்த அறிவழகன் (வயது 38), நிக்சன்,மதுரையை சேர்ந்த பாண்டியராஜன், (வயது 44) கணபதி நகர் ஜெயஸ்ரீ (வயது 21), ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அரியமங்கலம் அம்மன் குளம் பகுதியை சேர்ந்த பாட்ஷா (வயது 24), ஆசை முத்து (வயது 26) ஆகிய இரண்டு பேரை தேடி வருகின்றனர். இவர்கள் இரண்டு பேரும் ரவுடி பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்