வீட்டுக்கடன் மூலம் வீடு வாங்கிய பிறகு வரும் நிம்மதி, சிறிது காலம் ஈஎம்ஐகளை கட்டிய பிறகு எப்போது இந்த லோன் முடியும் என்ற கவலையாக மாறிவிடுகிறது. வீட்டுக்கடன் பாக்கி குறித்து கவலைப்பட வேண்டுமா? என்றால் தேவையில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனென்றால் இஎம்ஐயில் வீட்டுக் கடன் வாங்கியவருக்கு பதவி உயர்வு வரலாம். கூடவே நல்ல சம்பள
உயர்வும் வரலாம் அல்லது அதிக சம்பளத்தில் வேறு வேலைக்கு போகலாம். பிள்ளைகள் படிப்பு முடிந்து வேலையில் சேர்ந்து சம்பாதித்து வீட்டு செலவுகளை பகிர்ந்து கொள்ளலாம். இன்னொரு பக்கம் வீட்டின் விலை உயர்ந்துகொண்டே வரும். ஒரு பெரிய தொகை பூர்வீக சொத்து மூலமாகவோ, அலுவலகம் மூலமாகவோ கிடைக்கலாம். அதனால் நாளை நமக்கு நிச்சயம் சாதகமாக இருக்கும் என்று நம்பி, இன்றைய வேலைகளை பார்க்க வேண்டும். நிறைய பணம் சம்பாதிக்கும் வழிகளை யோசித்து உங்கள் மாதத்தவணையை சிறிய தொகையாக கருதும் அளவுக்கு வருமானத்தை உயர்த்தலாம்.
இந்தியாவில் வீட்டு கடன் வட்டி எப்போதும் தொடர்ச்சியாக அதிகமாக இருந்தது இல்லை. 2000 ஆண்டுகளில் 12லிருந்து 13 சதவீதமாக இருந்தது. பின் இந்த வட்டி விகிதம் படிப்படியாக குறைந்து 7.5 சதவீதம் ஆனது. தொடர்ந்து 6.5 சதவீதம் அளவுக்குகூட குறைந்து போனது. இந்தநிலையில் நாட்டின் பணவீக்க வீதத்தை கட்டுக்குள் கொண்டுவர ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதால் வீட்டு கடனுக்கான வட்டி படிப்படியாக 9 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. இன்னும் சராசரி மனிதர் கோடீஸ்வரராக என்ன செய்ய வேண்டும் ? அதிகபட்சம் ஏறினால் 0.5% உயரக்கூடும். இரட்டை இலக்கத்துக்கு உயர வாய்ப்பு இல்லை.
மேலும் ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கும்படி பண வீக்கம் குறையும்பட்சத்தில் வீட்டுக்கடனுக்கான வட்டியும் தானாக குறைந்துவிடும். வீட்டுக்கடன் என்பது வீட்டின் மதிப்பில் 70 சதவீதத்திலிருந்து 80 சதவீதம் வரை இருக்கும். போகப்போக வீட்டின் மதிப்பு அதிகரிக்கும்போது கடன் தொகையின் சதவீதம் குறைந்துவிடும். எனவே வீட்டுக்கடன் பற்றியோ, வட்டி விகித உயர்வு பற்றியோ பெரிதாக கவலைப்பட தேவையில்லை. கட்டும் அசல் மற்றும் வட்டிக்கு கிடைக்கும் வருமான வரி சலுகைகளும் ,வீட்டுக்கடனை லாபகரமாக மாற்றியமைக்கும்.