திருச்சி பஞ்சப்பூரிலிருந்து கோரையாறு கரை வழியாக வயலூர் செல்லும் சாலை விரிவாக்கம்…! * அதிகாரிகளுடன் அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை!
திருச்சி, பஞ்சப்பூரிலிருந்து கோரையாறு கரை வழியாக வயலூர் செல்லும் சாலையை விரிவாக்கம் செய்வது தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை நடத்தினார். அப்போது பணிகள் குறித்து கேட்டு அறிந்ததோடு, அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் மதுபாலன், நகர பொறியாளர் சிவபாதம் மற்றும் திமுக நிர்வாகிகள் டோல்கேட் சுப்பிரமணி, பி.ஆர்.பாலசுப்ரமணியன், ராமதாஸ், கதிரேசன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Comments are closed.